Categories

Wednesday 28 August 2013

மூளையின் மூளை - சிறுகதை

(இது நடக்கும் ஆண்டு கி.பி 2035 என மனதில் கொள்க)

ஒரே சமயத்தில் தோட்டத்திலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட ஆயிரம் பட்டாம்பூச்சியின் சிறக்கடிப்பை தன் இதயத்தில் உணர்ந்தபடி, தன் அறையில் பரபரப்பு மிகுந்த மூளையுடன், படபடக்கும் பார்வை மூக்குக் கண்ணாடி வழி ஊடுருவ இயங்கிக் கொண்டிருந்த அரவிந்தன், தன் மனைவி ராகினியின் பத்தாவது அழைப்பு ஒலி கேட்ட பின் அதற்கு செவி மடுக்க முடிவு செய்தார். அவருடைய வேலையும் ஓரளவு முடிந்து விட்டதால் ஒரு வழியாக அறையை விட்டு வெளியேறினார்.