Categories

Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Friday, 25 January 2019

அணிலாடும் முன்றில் அல்லோலப்படுது மண்ணில்


சும்மா ஒரு பதிவு. இன்னைக்கு அலுவலத்துல வழக்கம்போல மாலை தேநீர் குடிக்கப் போனேன். அணில் குஞ்சு ஒன்னு அலுவல வாகனங்கள் வெளிய போற வழில இறங்கி சாலைக்கு குறுக்க கீச்சு கீச்சுன்னு கத்திகிட்டு ஓடுது.

Monday, 24 July 2017

ஜியோ போன் வாங்கலாமா? வேணாமா?

ஊரே பரபரப்பா இப்ப பேசுறது ரெண்டு விஷயம் தான். ஒன்னு பிக் பாஸ்... இன்னொன்னு ஜியோ போன். ஜியோ 4ஜி போன் பத்தி ஏற்கனவே நிறைய தகவல்கள் சுத்திட்டு தான் இருந்துச்சு. அதெல்லாம் வெறும் புரளி இல்லைன்னு நிரூபனமாகிருக்கு.

Monday, 26 December 2016

மதுரைக் காஞ்சி - ஒரு பயணக் கட்டுரை

வீட்டு மனை விற்பனையாளர்கள் சொல்வதைப் போல 'சென்னைக்கு மிக அருகிலுள்ள' காஞ்சிபுரத்தை நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் கண்டதில்லை. சமீபத்தில் அதற்கான ஒரு வாய்ப்பு அமையவே, அரை நாள் பயணமாக காஞ்சிபுரம் சென்றேன்.

Wednesday, 14 September 2016

அகக் கடல் தான் பொங்குவதேன்? - ஒரு பயணக் கட்டுரை

"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?" என்ற பொன்னியின் செல்வனின் பாடல் வரியைத் தான் என் மனதும் பாடிக் கொண்டிருந்தது... ஆனால், பூங்குழலியின் சோகம் போல அல்லாமல் என் அகக் கடலாகிய மனம் பொங்க குதூகலமே காரணமாய் இருந்தது... 

Friday, 15 July 2016

ஊஞ்சல் மண்டபம்

இன்று மீனாட்சியம்மன் கோவிலுக்கு போயிருந்தேன். வழக்கமாகப் போகும் கோவில் என்றாலும், பலமுறை அந்த மண்டபத்தை பார்த்து உள்ளே சென்று இருந்தாலும், இன்று தான் அந்த மண்டபத்தை சற்று பொறுமையாக பார்த்து ரசித்தேன். மேலும் அதன் வரலாற்றையும் தெரிந்து கொண்டேன். அதைத் தான் இங்கே பதிவாய் இடவுள்ளேன்.  ஏற்கனவே, அந்த வரலாறு அங்கே ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தாலும், பல முறை கோவிலுக்குச் சென்ற என் போன்றவர்களே பார்க்கவில்லை எனும் போது, அதை இணையத்தில் பதிவதன் மூலம் இன்னும் சிலருக்கு சென்றடையும் எனத் தோன்றிதால் எழுதப்பட்டதே இப்பதிவு.

Monday, 28 December 2015

வீட்டுக் கடன் வாங்க கையேடு


'லோன் வாங்க லோலோவென அலைபவர்களே....' எனச் சொல்வதை விட 'லோன் கொடுக்க லோலோவென..' அலைகிறார்கள் என்பதே இன்றைய காலத்திற்கு சரி...

Tuesday, 30 July 2013

தாலாட்டு...

தாலாட்டு என்ற இலக்கிய வகை நம் கலாச்சாரத்துடன் இணைந்த ஒன்று... தால் என்றால் நாக்கு... நாக்கை ஆட்டிப் பாடுவதால் இது தால்+ஆட்டு= தாலாட்டு என்று ஆனது என்று ஆறாம் வகுப்பு செய்யுள் பகுதியில் படித்த ஞாபகம்.


Monday, 29 July 2013

பத்து வருடங்கள்

பி‌ஜி‌எம்ல எதுக்கும் எஸ்.ஏ.ராஜ்குமாரோட 'லலலா... லலலா' போட்டுக்கோங்க தேவைப்படும்.

பத்து வருடங்கள் என்பது ஒரு தனி மனிதனின் வாழ்வில் ஒரு குறிப்பிடப்படும்படியான பெரும் பகுதி.

Tuesday, 2 July 2013

மனித இனம், பல கேள்விகள்...

வெடித்துச் சிதறியதாய் சொல்லப்படும் இந்த அண்ட வெளியில் இருக்கும் பல விண்மீன் திரள்களின் ஊடே பால் வீதி திரளின் ஏதோ ஒரு மூலையில், சூரிய குடும்பத்தில், சூரியனை அச்சாக கொண்டு ஏதோ ஒரு ஈர்ப்பு விசை காரணமாக செக்கு இழுக்கும் மாடு போல, சுற்றி வரும் 8 கோள்கள் மத்தியில் ஒரு கோளான பூமியில் உள்ள பல கோடி உயிர்களுக்கு இடையில் கண்டம்,நாடு,மாநிலம்,இனம்,மொழி,மதம்,ஜாதி இன்னும் பல கூறுகளாய் பிரிக்கப்பட்ட ஒற்றை மனிதனின் ஆதி தேடல் என்னவாக இருந்திருக்கும்??

Sunday, 7 April 2013

என் எழுதுகோல்

நாம் வாழும் வாழ்க்கையில் இயற்கை நமக்கு தந்த உடலோடு சேர்த்து சில செயற்கை கருவிகளும் நம் உடலோடு பிணைந்துவிடுகின்றன. அப்படி ஒரு கருவி தான் நம் எழுதுகோல்.  

Wednesday, 27 February 2013

பிரம்மச்சாரி

பிரம்மச்சாரி... இது ஒரு விசித்திரமானதொரு மக்கள் கூட்டம். இந்த பிரம்மச்சாரிகளை பற்றி பொதுவாக ஒரு பிம்பம் இருக்கிறது. நானும் பிரம்மச்சாரி தான்.

Saturday, 16 February 2013

பொறந்த நாள்

பொறந்த நாள்... இதுல என்ன விசேஷம்? எதுக்காக கொண்டாடுறோம்...

Monday, 28 January 2013

பினாங்கில் தைப்பூசம்

பொதுவா பள்ளிக்கூடத்தில பயணக்கட்டுரை எழுதச் சொன்னாலே பத்து பேருக்கு பின்னால பம்முகிற பையன் தான் நானு... இப்ப ஏன்டா எழுதுறன்னு கேட்டா என்கிட்ட இப்ப பதில் இல்ல.. (படிக்குறது உங்க தலைவிதி :))

Tuesday, 22 January 2013

வாசிப்பு ஒரு சுய ஆராய்ச்சி


மனித மூளைக்குள் ஒரு நொடிக்குள் மின்சாரத்தை விட வேகமாக பாயும் நினைவலைகளில் தோன்றிய வேதியியல் ஆராய்ச்சியின் முடிவா? கழிவா? என புரியாத குழப்பத்தில் இப்பதிவை உடனே எழுத ஆரம்பித்துவிட்டேன்.