Categories

Monday 26 December 2016

மதுரைக் காஞ்சி - ஒரு பயணக் கட்டுரை

வீட்டு மனை விற்பனையாளர்கள் சொல்வதைப் போல 'சென்னைக்கு மிக அருகிலுள்ள' காஞ்சிபுரத்தை நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் கண்டதில்லை. சமீபத்தில் அதற்கான ஒரு வாய்ப்பு அமையவே, அரை நாள் பயணமாக காஞ்சிபுரம் சென்றேன்.

Wednesday 14 September 2016

அகக் கடல் தான் பொங்குவதேன்? - ஒரு பயணக் கட்டுரை

"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?" என்ற பொன்னியின் செல்வனின் பாடல் வரியைத் தான் என் மனதும் பாடிக் கொண்டிருந்தது... ஆனால், பூங்குழலியின் சோகம் போல அல்லாமல் என் அகக் கடலாகிய மனம் பொங்க குதூகலமே காரணமாய் இருந்தது... 

Friday 15 July 2016

ஊஞ்சல் மண்டபம்

இன்று மீனாட்சியம்மன் கோவிலுக்கு போயிருந்தேன். வழக்கமாகப் போகும் கோவில் என்றாலும், பலமுறை அந்த மண்டபத்தை பார்த்து உள்ளே சென்று இருந்தாலும், இன்று தான் அந்த மண்டபத்தை சற்று பொறுமையாக பார்த்து ரசித்தேன். மேலும் அதன் வரலாற்றையும் தெரிந்து கொண்டேன். அதைத் தான் இங்கே பதிவாய் இடவுள்ளேன்.  ஏற்கனவே, அந்த வரலாறு அங்கே ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தாலும், பல முறை கோவிலுக்குச் சென்ற என் போன்றவர்களே பார்க்கவில்லை எனும் போது, அதை இணையத்தில் பதிவதன் மூலம் இன்னும் சிலருக்கு சென்றடையும் எனத் தோன்றிதால் எழுதப்பட்டதே இப்பதிவு.