Categories

Saturday 30 March 2013

காண்பாயா?

சில வருடங்களுக்கு முன்னால் நான் எழுதிய கவிதை திடீர் என பழைய பாசறையில் கிடைக்கவே, அதை ஒரு பதிவாய் போட இங்கு வந்துவிட்டேன். அபத்தமாக பட்டால் மன்னித்தருளுங்கள்... :-) 





உன் கண்ணிமை துடிப்பில் தான்,
பட்டாம்பூச்சியின் சிறகடிப்பை கண்டேன்

உன் நாசி சுவாசத்தில் தான்,
என் உயிர்மூச்சு சுழலக் கண்டேன்

உன் வெட்கச்‌ சிரிப்பில் தான்,
செவ்வானத்தின் நிறம் கண்டேன்

உன் கூந்தல் விரிப்பில் தான்,
பூக்களின் நறுமணம் கண்டேன்

உன் தாவணி அசைவில் தான்,
தென்றலின் வாசம் கண்டேன்

உன் உடலின் நெளிவுகளில் தான்,
ஆறுகளின் வளைவுபாதைகள் கண்டேன்

தத்தையே! உன்னை கண்டபின் தான்,
என்னையும் கண்டேன் உலகையும் கண்டேன்

உன்னைக் காண உன்வழி வரும் என்னை
ஒரு கணமாவது காண்பாயா அன்பே? 
நன்றி,
ச.சக்திவேல்


1 comment: