Categories

Wednesday 12 December 2012

நான் ரசித்த என் கீச்சுக்கள் பகுதி - 3

1) பொய்யில் கூட ஒரு மெய்(எழுத்து) உள்ளது...

2) நீ விலகி போவதால் என்றுமே வருத்தப்பட்டதில்லை...
 நீ என் நெஞ்சில் விலகாமல் இருப்பதால்...

3) உலகில் ஒன்றாய் என்னை பார்க்கிறாய் நீ...
 என் உலகே ஒன்றானதாய் உன்னை பார்க்கிறேன் நான்...





4) எனக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும்,
 என்றென்றும் நான் ரசிக்கும் முதல் குழந்தை நீ... #தங்கை

5) எனக்காக அடிகளை வாங்கிக் கொண்டு,
 உனக்கான என் கண்ணீரை துடைப்பவள் நீ... #அக்கா

6) நீ என்னை காதலுடன் காணும் ஒரு பார்வை ஒளியில்...
என் நிழலுக்குள்ளும் இருள் மறைகிறது...

7) எதையும் முன் வைக்க முன் நிற்கிறேன்...
முன் வராத வார்த்தைகளால் பின் தள்ளப்படுகிறேன்...

8) துயில் கலையும் பொழுதெல்லாம் துகில் உரிக்கப்படுகின்றேன்...
 நீ வந்தது கனவென உணர்வதால்...

9) உன் பார்வையால் என்னை சுட்டெரிக்கும் போதெல்லாம்
அவனில்(owen) வைத்த அல்வாவாக உருகிவிடுகிறேன்...

10) காலையில் நீ கண்சிமிட்டும் பொழுதெல்லாம்,
வெயிலில் சுகம் கண்ட எருமை போல உறைகிறேன் நான்...#udanpirappe effect

11) மழைத் திரவம் படரும் தருணத்தை விட,
 உன் பார்வை திரவம் என் மீது படரும் பொழுதே சிலிர்க்கிறேன் நான்...

12) உனை கண்டு கவிதையால் வர்ணிக்க நினைத்தேன்...
 உனை கண்டவுடன் மெய்யோடு சேர்த்து கவிதையும் மறந்து போய்விட்டேன்...#சமாளிப்பு கவுஜ

No comments:

Post a Comment