இந்தியா இளைஞர்கள் அதிகம் உள்ள நாடு. பல முன்னேறிய நாடுகளை ஒப்பிடும்போது, இங்கு மாற்றுத் திறனாளிகள் & முதியவர்களுக்கான கவனம் மிகக் குறைவு தான். அவர்கள் இந்த சமூகத்தில் தனிச்சையாக செயல்பட ஏதுவான சூழல் இல்லையென்பதே நிதர்சனம். முதியவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் சிறந்த வழிமுறை அல்லது வழிகாட்டுதல்கள் இல்லை.அதுவும் தற்போது சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைந்து வரும் சூழலில், வழிக்காட்டுதல் மிக அவசியம்.
Saturday, 19 August 2017
Monday, 24 July 2017
ஜியோ போன் வாங்கலாமா? வேணாமா?
ஊரே பரபரப்பா இப்ப பேசுறது ரெண்டு விஷயம் தான். ஒன்னு பிக் பாஸ்... இன்னொன்னு ஜியோ போன். ஜியோ 4ஜி போன் பத்தி ஏற்கனவே நிறைய தகவல்கள் சுத்திட்டு தான் இருந்துச்சு. அதெல்லாம் வெறும் புரளி இல்லைன்னு நிரூபனமாகிருக்கு.
Friday, 21 July 2017
சிறந்த மாதாந்திர வருமானத் திட்டம்
நம் அன்றாட வாழ்வில் பல மாதாந்திர வருமானத் திட்டங்களை கடந்து இருப்போம். சில திட்டங்களில் முதலீடு செய்து இருப்போம். எந்தத் திட்டம் மிக சிறந்தது என ஆராய்ந்து முடிவு எடுக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைவதில்லை. எனவே அந்தந்த தேவைகளின் போது நமக்கு கிடைக்கிற அறிவுரைகளின் அடிப்படையில் முதலீடு செய்கிறோம்.
Saturday, 15 July 2017
தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி?
தங்கம்.... தங்கம் என்பது என்ன? ஒரு உலோகம். அவ்வளவு தான்... இப்படி சும்மா கடந்திட முடியலையே... ஏன்?
Monday, 26 December 2016
மதுரைக் காஞ்சி - ஒரு பயணக் கட்டுரை
வீட்டு மனை விற்பனையாளர்கள் சொல்வதைப் போல 'சென்னைக்கு மிக அருகிலுள்ள' காஞ்சிபுரத்தை நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் கண்டதில்லை. சமீபத்தில் அதற்கான ஒரு வாய்ப்பு அமையவே, அரை நாள் பயணமாக காஞ்சிபுரம் சென்றேன்.
Wednesday, 14 September 2016
அகக் கடல் தான் பொங்குவதேன்? - ஒரு பயணக் கட்டுரை
"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?" என்ற பொன்னியின் செல்வனின் பாடல் வரியைத் தான் என் மனதும் பாடிக் கொண்டிருந்தது... ஆனால், பூங்குழலியின் சோகம் போல அல்லாமல் என் அகக் கடலாகிய மனம் பொங்க குதூகலமே காரணமாய் இருந்தது...
Friday, 15 July 2016
ஊஞ்சல் மண்டபம்
இன்று மீனாட்சியம்மன் கோவிலுக்கு போயிருந்தேன். வழக்கமாகப் போகும் கோவில் என்றாலும், பலமுறை அந்த மண்டபத்தை பார்த்து உள்ளே சென்று இருந்தாலும், இன்று தான் அந்த மண்டபத்தை சற்று பொறுமையாக பார்த்து ரசித்தேன். மேலும் அதன் வரலாற்றையும் தெரிந்து கொண்டேன். அதைத் தான் இங்கே பதிவாய் இடவுள்ளேன். ஏற்கனவே, அந்த வரலாறு அங்கே ஒரு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்தாலும், பல முறை கோவிலுக்குச் சென்ற என் போன்றவர்களே பார்க்கவில்லை எனும் போது, அதை இணையத்தில் பதிவதன் மூலம் இன்னும் சிலருக்கு சென்றடையும் எனத் தோன்றிதால் எழுதப்பட்டதே இப்பதிவு.
Subscribe to:
Posts (Atom)