Categories

Thursday, 5 December 2013

ஆரம்பம் – திரை விமர்சனம்

சரி. நாமளும் திரை விமர்சனம் எழுத ஆரம்பிக்கலாம்ன்னு முடிவு எடுத்து, எந்த படத்துக்கு எழுதலாம்ன்னு யோசிச்சப்ப, படம் முழுக்க ஆரம்பம்ன்னு அடிக்கடி சொல்லுற ஆரம்பம் படத்துக்கே திரை விமர்சனம் எழுத ஆரம்பிக்கலாம்ன்னு தோணுச்சு...


Wednesday, 28 August 2013

மூளையின் மூளை - சிறுகதை

(இது நடக்கும் ஆண்டு கி.பி 2035 என மனதில் கொள்க)

ஒரே சமயத்தில் தோட்டத்திலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்ட ஆயிரம் பட்டாம்பூச்சியின் சிறக்கடிப்பை தன் இதயத்தில் உணர்ந்தபடி, தன் அறையில் பரபரப்பு மிகுந்த மூளையுடன், படபடக்கும் பார்வை மூக்குக் கண்ணாடி வழி ஊடுருவ இயங்கிக் கொண்டிருந்த அரவிந்தன், தன் மனைவி ராகினியின் பத்தாவது அழைப்பு ஒலி கேட்ட பின் அதற்கு செவி மடுக்க முடிவு செய்தார். அவருடைய வேலையும் ஓரளவு முடிந்து விட்டதால் ஒரு வழியாக அறையை விட்டு வெளியேறினார்.

Tuesday, 30 July 2013

தாலாட்டு...

தாலாட்டு என்ற இலக்கிய வகை நம் கலாச்சாரத்துடன் இணைந்த ஒன்று... தால் என்றால் நாக்கு... நாக்கை ஆட்டிப் பாடுவதால் இது தால்+ஆட்டு= தாலாட்டு என்று ஆனது என்று ஆறாம் வகுப்பு செய்யுள் பகுதியில் படித்த ஞாபகம்.


Monday, 29 July 2013

பத்து வருடங்கள்

பி‌ஜி‌எம்ல எதுக்கும் எஸ்.ஏ.ராஜ்குமாரோட 'லலலா... லலலா' போட்டுக்கோங்க தேவைப்படும்.

பத்து வருடங்கள் என்பது ஒரு தனி மனிதனின் வாழ்வில் ஒரு குறிப்பிடப்படும்படியான பெரும் பகுதி.

Sunday, 21 July 2013

கவிதைக் கிறுக்கல்கள் பகுதி-2

1) மழை வரும்போது கப்பலாய்,
கலை வரும்போது ஓவியமாய்,
காதல் வரும்போது கவிதையாய், கோவம் வரும்போது குப்பையாய்,
காகிதம்...

Monday, 8 July 2013

நான் ரசித்த எனது கீச்சுக்கள் பகுதி - 9

1) எனது எழுத்தை வைத்து என்னை கணித்தால்,
என் கற்பனை சக்தியின் மீது உமக்கு அவநம்பிக்கை எனக் கொள்க... 

Tuesday, 2 July 2013

மனித இனம், பல கேள்விகள்...

வெடித்துச் சிதறியதாய் சொல்லப்படும் இந்த அண்ட வெளியில் இருக்கும் பல விண்மீன் திரள்களின் ஊடே பால் வீதி திரளின் ஏதோ ஒரு மூலையில், சூரிய குடும்பத்தில், சூரியனை அச்சாக கொண்டு ஏதோ ஒரு ஈர்ப்பு விசை காரணமாக செக்கு இழுக்கும் மாடு போல, சுற்றி வரும் 8 கோள்கள் மத்தியில் ஒரு கோளான பூமியில் உள்ள பல கோடி உயிர்களுக்கு இடையில் கண்டம்,நாடு,மாநிலம்,இனம்,மொழி,மதம்,ஜாதி இன்னும் பல கூறுகளாய் பிரிக்கப்பட்ட ஒற்றை மனிதனின் ஆதி தேடல் என்னவாக இருந்திருக்கும்??